தண்ணீர்கான “waterbell”பெற்றோர்கள் மகிழ்ச்சி?

Photo of author

By CineDesk

தண்ணீர்கான “waterbell”பெற்றோர்கள் மகிழ்ச்சி?

CineDesk

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சரிவர தண்ணீர் குடிப்பதில்லை என பெற்றோர்கள் மிகவும் வருத்த படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் போக்க கேரளா மாநிலம், குழந்தைகள் குடிநீர் குடிக்கவே காலை மற்றும் நண்பகலில் 2 முறை ‘water bell‘ நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது பெற்றோரிடம் மிகுந்த வரப்பேற்பை பெற்றது. இதே நடைமுறை கர்நாடகத்திலும் அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் ‘water bell‘ நடைமுறை அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பித்துள்ளது .

அதில் காலையில் ஒரு முறை, மதிய உணவுக்கு பிறகு என ஒரு முறை ஒரு நாளைக்கு 2 முறை இந்த ‘water bell‘ ஒலிக்க செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் வீதம் 20 நிமிடம் ஒதுக்க வேண்டும். இந்த 20 நிமிடத்தில் குழந்தைகள் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது அம்மாநில பெற்றோரிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.