Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500!

Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500!

திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் நல்லாட்சி அமைக்கும் நோக்கில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஆட்சி அமர்ந்த  உடனே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து ,பால் விலை குறைப்பு போன்றவற்றை ஏற்படுத்தியது. முதல் முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டது குறிபிடத்தக்கது.அதனால் விவசாயிகள் பலனடைந்தனர்.அதுமட்டுமின்றி இளைஞர்களை விவசாயத்திற்குள் கொண்டு வரும் நோக்கில் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.2.68 கோடியை ஒதுக்கியுள்ளனர்.

மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் திமுக கருனானைதின் இருந்த போது போடப்பட்டது.ஆனால் அவருக்கடுத்த ஆட்சியில் அத்திட்டம் வரவில்லை.தற்பொழுது 51 ஆண்டுகள் கழித்து அத்திட்டத்தை திமுக தலைவர் மற்று முதல்வரான முக.ஸ்டாலின் அவர்கள் நடைமுறைபடுத்தினர்.மேலும் பயிற்சி பெற்ற 82 அர்ச்சகரர்களுக்கு பணி நியமனம் ஆணையும்  வழங்கினார் என்பது குறிபிடத்தக்கது.இவ்வாறு தொடர்ந்து பல நத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அதேபோல மாணவர்களுக்கும் சத்துனவுகளில் பயிறுவகைகள் வழங்கப்படும் என கூறினார்.அதனையடுத்து மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தற்போது 55 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். அதேபோலவே சென்றவாரம் சேலம் வருகை புரிந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். 202 அறிக்கையை நிறைவேற்றியதாக திமுக அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தி மு க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்வானது சென்னை ,தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 9 ஆயிரத்து 173 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். அதேபோல மாற்று திறனாளிகள் பராமரிப்புக்கென்று ஆயிரத்து 500 ரூபாய் வழங்கினார். மேலும் 1628 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கினார். அதனையடுத்து கருணை அடிப்படையில் பணி காலத்தில் இருந்த நான்கு பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கினார்.

Leave a Comment