Breaking News

மளிகை கடையில் பொருள் வாங்குவது தான் கேள்விப்பட்டிருப்போம்! இங்கு பாருங்கள் என்ன நடக்குதுன்னு!

மளிகை கடையில் பொருள் வாங்குவது தான் கேள்விப்பட்டிருப்போம்! இங்கு பாருங்கள் என்ன நடக்குதுன்னு!

தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி வசந்தி (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் 2 வாலிபர்கள் மளிகை கடையில் உள்ளே வந்து பொருள் வாங்குவது போல் நடித்தனர். அப்போது வசந்தி கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துள்ளனர்.

அதை சுதாரித்துக் கொண்ட வசந்தி செயினை பிடித்துக்கொண்டார். ஆனாலும் பாதி செயினை பறித்துக்கொண்ட வாலிபர்கள் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி வசந்தி தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment