என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!!

0
103
What atrocity is this!! The assailants who stole the bus while drunk!!
What atrocity is this!! The assailants who stole the bus while drunk!!

என்ன கொடுமை சார் இது!! குடிபோதையில் பேருந்தை திருடிய ஆசாமிகள்!!

புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் மனகுல விநாயகர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி பேருந்தில் காலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டும் மாலை நேரத்தில் மாணவர்களை அவரவர் வீட்டில்  இறக்கிவிட்டார் பேருந்து ஓட்டுனர் . பிறகு அருகிலுள்ள காளியம்மன் ஆலய ஆர்சி எதிரே நிறுத்திவிட்டு ஓட்டுனர் பாஸ்கரர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரண்டு நாள் விடுமுறை என்பதால் இன்று அதிகாலை4 மணி அளவில் மீண்டும் மாணவர்களை ஏற்றி செல்வதற்காக அக்கல்லூரி பேருந்தை எடுப்பதற்காக ஓட்டுநர் வந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட  பேருந்து காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் கல்லூரி மேலாளர் கணேசனுக்கு தகவல் கொடுத்தார்.

உடனே அந்த கல்லூரி மேலாளர் பேருந்து தேடி வந்த போது கடலூர் புதுநகர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட உண்ணாமலை செட்டி சாவடி அடுத்த சோரிங்குப்பம், மதுவிலக்கு விற்பனை சோதனை சாவடி அருகே நிற்பதை கண்டார். பிறகு பேருந்து மேலாளர் காவல்நிலையத்திற்கு  தகவல் கொடுத்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்தனர்.  விசாரணையின் போது நடுவீரப்பட்டை சேர்ந்த அஜித்குமார், சூரப்ப நாயக்கர் சாவடியை சேர்ந்த பெரியசாமி ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் காவால்  நிலையத்திற்கு  அனுப்பி வைத்தனர்.

எதற்காக பேருந்து கடத்தினார்கள் என்பது குறித்தும்?முன்பகை காரணமாக கடத்தினார்களா இல்லை ?மது போதை தலைக்கேறியதால் ஏற்பட்ட காரணமா ?என்றும் சிதம்பர போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K