என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!! 

0
39
What food does this man eat?? The perverse thing that the son did for the wrong meal!!
What food does this man eat?? The perverse thing that the son did for the wrong meal!!

என்ன சாப்பாடு இது மனுஷன் சாப்பிடுவானா?? சரியில்லாத சாப்பாட்டிற்காக மகன் செய்த விபரீத காரியம்!! 

சாப்பாடு சரியில்லாத காரணத்தால் தாயை மகனே கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலங்களில் கொலை செய்வது என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. சின்ன, சின்ன காரணங்களுக்கெல்லாம் தற்போது கொலை செய்ய தொடங்கி விட்டனர். இதில் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் கூட  அடக்கம். சாதாரண நிகழ்வுக்கே தற்போது கொலை செய்யும் அளவு துணிந்து விட்டனர். அதுபோன்று  சாப்பாடு டேஸ்டாக இல்லாத காரணத்தினால் தாயை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள முர்பாத் தாலுக்கா, வேலு கிராமத்தில் 55 வயது உடைய பெண் ஒருவர் தனது வாலிப வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தாய்க்கும், மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் அடிக்கடி சண்டை ஏற்படுவதும் பின்னர் அக்கம் பக்கத்தினர் முயற்சியினால் சமாதானம் ஆவதும் நடைபெற்று வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் தனது மகனுக்கு தாய் சாப்பாடு பரிமாறியுள்ளார். அப்போது அந்த சாப்பாட்டை சாப்பிட்ட மகன்,என்ன சாப்பாடும் இது?  சுத்தமாக டேஸ்டே இல்லை எனக் கூறி சண்டை போட்டுள்ளார். இதன் காரணமாக தாய்க்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகன் கொஞ்சம் கூட யோசிக்காமல் தனது தாயின் கழுத்தை அரிவாளால் அறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் அதிக ரத்தம் வெளியேறி சுருண்டு விழுந்த அவரது தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார்.

அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தானே காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே, குற்றம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகனால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் தாயை கொலை செய்ததால் தன்னை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்று பயந்த மகன் தற்கொலை செய்யும் முயற்சியாக தூக்க மாத்திரைகளை அதிக அளவில் தின்றுள்ளார். அவரையும் மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கொலை சம்பவத்திற்காக இன்னும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பாடு சரியில்லாததற்காக பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.