கல்லூரி சென்ற மாணவிக்கு நடந்தது என்ன?போலீசார் தீவிர விசாரணை!

Photo of author

By Parthipan K

கல்லூரி சென்ற மாணவிக்கு நடந்தது என்ன?போலீசார் தீவிர விசாரணை!

Parthipan K

what-happened-to-the-student-who-went-to-college-police-intensive-investigation

கல்லூரி சென்ற மாணவிக்கு நடந்தது என்ன?போலீசார் தீவிர விசாரணை!

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பில்லூர் கிராமம் ஊர் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகள் தேன்மொழி(20). இவர் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுள்ளார்.

ஆனால் மாலை வெகுநேரம்மாகியும் தேன்மொழி வீடு திரும்பவில்லை அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை அதனால் அவருடைய தந்தை பழனிசாமி தோகைமலை போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் ,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.