சிறையில் தற்போது செந்தில் பாலாஜியின் நிலை என்ன?? வெளிவந்த தகவல்!!

0
34
What is the current status of Senthil Balaji in jail?? Information released!!
What is the current status of Senthil Balaji in jail?? Information released!!

சிறையில் தற்போது செந்தில் பாலாஜியின் நிலை என்ன?? வெளிவந்த தகவல்!! 

அமலாக்கத்துறை சோதனையில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சட்டவிரோதமாக பணம் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவமனை மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர்களின் அறிவுரைப்படி அவருக்கு தயிர்சாதமும், சப்பாத்தி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பணம் பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கடந்த ஜூன்14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூன் 21ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். முழு அளவில் உடல்நிலை தேறியதால் கடந்த திங்கள்கிழமை செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு ஏற்கனவே ஜூலை 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலையில் அவரை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் அங்குள்ள கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனர். இதையடுத்து கைதிகள் மருத்துவமனையில் தனியாக உருவாக்கப்பட்டிருந்த அறையில் செந்தில் பாலாஜி தங்க வைக்கப்பட்டார்.

அந்த அறையில் அவருக்கு கட்டில், மெத்தை, மின்விசிறி, கொசுவலை, சேர், மேஜை அறையுடன் கூடிய மேற்கத்திய கழிவறை ஆகிய வசதிகள் இருந்தன. அவருடன் எப்போதும் இருப்பதற்கு முதல் நிலை காவலர், உதவி ஜெய்லர் என ரேங்க் அளவிலான இருவர்   நியமிக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி முதல் வகுப்பு கைதி என்பதால் அதற்கேற்றார் போல் வசதிகளும் உணவும் வழங்கப்பட்டதாக சிறை துறையினர் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை காலை சுமார் 20 நிமிஷம் நடைப்பயிற்சியை செந்தில் பாலாஜி மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில நாளிதழ்களை படித்துள்ளார்.

அறையில் ஓய்வெடுத்தவர் மதிய உணவை சாப்பிட்டு மீண்டும் மாலையில் நடை பயிற்சி மேற்கொண்டார். முதல் நாளில் பிற கைதிகளுடன் பேசுவதை செந்தில்பாலாஜி தவிர்த்து உள்ளார்.

அவருக்கு வெளியில் இருந்து உணவு அனுமதி கிடையாது. சிறையில் தயாராகும் உணவுதான் வழங்கப்படுகிறது. மேலும் அவர் இட்லி, தோசை கேட்டால் செய்து கொடுக்கப்படும். அதேபோல் மதிய உணவில் சாதம், சாம்பார், கூட்டு, அல்லது பொரியல் தரப்படும்.

ஒருவேளை சிறைகூடத்தில் தயாரித்த உணவு வேண்டாம் என்றால் சிறை உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவை சாப்பிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.