எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

0
214

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

காலையில் அரசனைப் போன்றும் நண்பகலில் சாதாரண மனிதனை போன்றும் இரவு நேரங்களில் பிச்சைக் காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஏனெனில் காலை நேரங்களில் உணவுக்குப் பிறகு உடலுக்கான உழைப்பு நேரம் தீவிரமடைகிறது. அதனால் வயிறு அடைக்க உணவு உண்டாலும் செரிமானம் என்பது சிக்கல் இல்லாமல் இருக்கும்.

மதிய நேரங்களில் உடலுக்கான உழைப்பு சற்றே குறையும் என்பதால் அதிகப்படியான உணவு செரிமானத்துக் கான நேரத்தை அதிகரிக்கும். இரவு நேரங்களில் உடல் ஓய்வுக்கான நேரம் என்பதால் உள் உறுப்புகளுக்கு அதிகமான வேலையை தராமல் இருப்பது ஆரோக்யத்துக்கு நன்மை அளிப்பதாக இருக்கும்.

காலை உணவை 8 மணி முதல் 8.30-க்குள் சாப்பிட வேண்டும். மதிய உணவை ஒரு மணி முதல் 1.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். இரவு உணவைப் பொறுத்தவரை, வீட்டில் இருப்போர் இரவு 7 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. யாராக இருந்தாலும் 8.30 மணிக்குள் இரவு உணவைச் சாப்பிடுவது சிறந்தது.

உணவை எந்த திசையில் அமர்ந்து உண்பதன் மூலம் என்ன பயன் என்பதையும் நமது முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர்.

கிழக்கு திசை:கிழக்கு நோக்கி அமர்ந்து உண்டால் ஆயில் விருத்தி ஏற்படும்.

மேற்கு திசை:மேற்கு நோக்கி அமர்ந்து உண்டால் செல்வ விருத்தி ஏற்படும்.

தெற்கு திசை:தெற்கு திசை நோக்கி அமர்ந்து உண்டால் புகழ் அல்லது நோய் வளரும்.

வடக்கு திசை: எப்பொழுதும் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்பதை தவிர்க்க வேண்டும்.

 

Previous articleஏகாதசி வழிபாடு…!!இந்த விரதங்கள் இருந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்!..
Next article23-8-2022 இன்றைய ராசி பலன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here