பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது-அமைச்சர் மெய்யநாதன்!

0
127
#image_title

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது எனவும் வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என கோவையில் கார்பன் சமநிலை கருத்தரங்கில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு.

பேனா சிலை அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதும் அவர்கள் வெளியிட்டுள்ள வழிகாட்டல் படி செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கோவையில் பேட்டி.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் நியூட்ரல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

காலநிலை மாற்ற பாதிப்புகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. நவீன தொழில்நுட்பம் பொருளாதார வளர்ச்சி உள்ள மாவட்டமாக கோவை வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் காலநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்பு உள்ள இரண்டு மாநிலம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம், போக்குவரத்து மற்றும் தொழில்துறை தான் கார்பன்களை அதிகளவில் வெளியிடுகின்றனர். கார்பன் வெளியேற்றத்தில் அதிக அளவில் வெளியிடும் நாடுகள் சைனா அமெரிக்கா. நாம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறோம். கார்பன் சமநிலை என்ற இலக்கை எளிதில் அடைய முடியாது.

எங்கள் ஊரில் வெப்பம் 105 டிகிரியை எட்டியுள்ளது.தனது வாழ்நாளில் இவ்வளவு வெப்பத்தை இதற்கு முன் பார்த்ததில்லை. ஆண்டுக்கு 10 கோடி மரங்களை நடவு செய்ய இலக்கு வைத்துள்ளோம்.

ராமேஸ்வரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரண்டு நகராட்சிகள் கார்பன் இலக்கை எட்ட திட்டங்கள் தொடங்கி உள்ளோம். கன்னியாகுமரி மாவட்டத்திலும் அடுத்த பணிகளை தொடங்க உள்ளோம்.

மேலும் டெல்டா மண்டலமான ஐந்து மாவட்டங்களில் கார்பன் வெளியேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.கோவையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மெட்ரிக் முறைகளை கையாளுவதால் விரைவில் இரண்டு ஏக்கர் நிலம் மீட்கப்படும்.

இளைஞர்கள் நீர் நிலைகள் பாதுகாப்பது குறித்து செயல்பட்டு வருவது மகிழ்ச்சி.அந்த இளைஞர்களை பாராட்ட 100 பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை பரிசு அளிக்க உள்ளோம்.

மேலும் எங்காவது பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது. அந்த கோபம் ஒவ்வொரு மனிதருக்கும் வர வேண்டும் எனவும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற உயிர்களைப் பாதிக்கும் நிலையை உருவாக்கி வருவதாக கூறினார்.

மேலும் மீண்டும் மஞ்சப்பை என்பது அற்புதமான திட்டம் என தெரிவித்தார்.
தொடர்ந்து மேடைப் பேச்சுக்கு பின் கார்பன் சமநிலை குறித்த புத்தகத்தை அமைச்சர்,மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது. 2050க்குள் கார்பன் சமநிலை கொண்டு வர அதன் அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

பொது இடங்களில் மரங்களை நட, போக்குவரத்துகளில் ஏற்படக்கூடிய கார்பன் குறைப்பு, நீர் நிலைகளை பாதுகாப்பது ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது.

கார்பன் நியூட்ரல் அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
கோவையில் 10 லட்சம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிகப்படுத்துவோம். தமிழகத்தில் 10 கோடி மரம் நடவு செய்யப்படும். இந்த இலக்கை நோக்கி செயல்படுகிறோம்.

ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் 70 லட்சம் மரங்கள் நடவு செய்வதாக அறிவிக்கிறார். ஆறு லட்சத்து 40 ஆயிரம் மரங்களை உணவுத்துறை அமைச்சர் நடவு செய்துள்ளார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலமாக செங்கல் சூளை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறை அமைச்சர் அறிவிப்பு இரண்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5000 மெகாவாட்டு மின்சாரத்தை காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த பயனும் இல்லை. வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்.
நாட்டு மரங்கள் தான் நடவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளோம்.
பொள்ளாச்சி காயில் இண்டஸ்ட்ட்ரீ நிலத்தடி நீர்நிலைகள் பாதிப்பு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மரங்களை நடவு செய்வது முக்கியமில்லை வளர்க்க வேண்டும்.

பேனா சிலை அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள வழிகாட்டல் படி செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

author avatar
Savitha