டிரெய்லர் பார்த்ததும் தாவம்பட்டை எல்லாம் தரையில கிடக்கும் !!! எழுத்தாளர் தீரஜ் வைடி கூறியது என்ன!!?

0
27
#image_title

டிரெய்லர் பார்த்ததும் தாவம்பட்டை எல்லாம் தரையில கிடக்கும் !!! எழுத்தாளர் தீரஜ் வைடி கூறியது என்ன!!?

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை(அக்டோபர்5) வெளியாகவுள்ள நிலையில் எழுத்தாளர் தீரஜ் வைடி அவர்கள் டிரெய்லர் பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருடயை இந்த பதிவு லியோ டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

லியோ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க படக்குழு அப்டேட்டுகளை வாரிக் குவித்து ரசிகர்களுக்கு தந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி மாலை படக்குழு லியோ திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிபுக்கான புதிய போஸ்டர் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எழுத்தாளர் தீரஜ் வைடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் செய்த பதிவு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதாவது எழுத்தாளர் தீரஜ் வைடி அவர்கள் போஸ்ட் செய்துள்ள பதிவில் “நான் இப்பதான் லோகேஷ் கனகராஜ் அவங்கள மீட் பண்றேன். லியோ டிரெய்லரும் நான் பாத்துட்டேன். லியோ டிரெய்லர நீங்க பாக்கும் பொழுது உங்க தாவம்பட்டை எல்லாம் தரையிலதான் இருக்கும்” அப்படினு டுவீட் செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.