மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

0
122
#image_title

மாத்திரை சாப்பிடும் பொழுது சுடுதண்ணீர் பயன்படுத்தலாமா!! தெரிந்து கொள்ளுங்கள்!!

பொதுவாக நம் உண்ணும் பொருளின் தன்மையை அறிந்து கொண்டு உண்ண வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அதுவே நமக்கு ஆபத்தாக அமைந்து விடும். அந்த வகையில் நோய்களுக்காக சாப்பிட மாத்திரையை தவறாக உண்டு வருகிறோம். மாத்திரையை நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு உண்ண வேண்டும்.

மேலும் மாத்திரைகளை சுடுநீர் சாப்பிடுவதால் பல ஆபத்துக்கள் வர காரணமாகிறது. எனவே அவ்வாறு உண்பதை தவிர்த்து நல்ல முறையில் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை உடலின் மற்ற உறுப்புகளுக்கு எடுத்துச் கருவியாக செல்ல கருவியாக திரவம் பொருட்களாகும். அதில் தண்ணீர் மிக முக்கியமான ஒன்றாகும்.

மேலும் மாத்திரைகள் பல வகை உண்டு அதன் தன்மைக்கேற்ப தட்பவெப்ப நிலையை அறிந்து திரவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கேப்சூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரை இன்றைய சூழ்நிலையில் பல மாத்திரைகள் இருக்கிறது. இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விட்டமின் டி கால்சியம் போன்ற மாத்திரைகள் பாலை பயன்படுத்தி குடித்து வரலாம் இதனால் எந்த தவறும் இல்லை. சில வகை மாத்திரைகளுக்கு வெந்நீரை பயன்படுத்தக் கூடாது குறிப்பாக கேப்சூல் வகை மாத்திரைகள். அதற்கு காரணம் வெந்நீரில் உண்பதால் கேப்சூல் மாத்திரை நாக்கில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. மேலும் அதில் வாந்தி வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்ததாக பாராசிட்டமல் காய்ச்சல் மாத்திரைகளை வெதுவெதுப்பான நீரில் குடிப்பது மிகவும் நல்லது. அதில் சிலர் மாத்திரைகளை சாக்லேட் மாதிரி மென்று சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் காரணம் மென்று மாத்திரைகளை உண்பதால் வாயிலேயே தங்கிவிடும் உடலுக்கு சிறிதளவு மாத்திரை மட்டுமே செல்லும் இவ்வாறு செய்தால் நோய்களை உடனடியாக தீர்ப்பதில்லை.

மாத்திரையை உண்ணும்போது போதுமான அளவு நீரை எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் மாத்திரைகள் வயிற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டும்.

மேலும் சாப்பிட்டவுடன் மாத்திரைகளை உண்பது தவறான செயலாகும். அதனை உடனடியாக விட்டுவிட்டு 15 நிமிடங்கள் கழித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலர் பல மாத்திரைகளை ஒன்றாக உண்பதும் தவிர்க்க வேண்டும் என்றால் பல விளைவுகள் ஏற்படும். உங்களுக்கு மாத்திரை உண்பதில் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

author avatar
Jeevitha