தூக்கிட்டு மனைவி தற்கொலை!! வரதட்சணை என புகார் கூறியதால் மறுநாள் மனைவி சமாதி அருகில்   கணவர் செய்த அதிர்ச்சி செயல்!! 

0
137
Wife committed suicide by hanging!! The husband did a shocking act near the wife's grave the next day because she complained about dowry!!
Wife committed suicide by hanging!! The husband did a shocking act near the wife's grave the next day because she complained about dowry!!

தூக்கிட்டு மனைவி தற்கொலை!! வரதட்சணை என புகார் கூறியதால் மறுநாள் மனைவி சமாதி அருகில்   கணவர் செய்த அதிர்ச்சி செயல்!! 

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு கணவனே காரணம் என உறவினர்கள் கூறியதால் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . அதுவும் மனைவி இறந்த மறுநாளே அவரின் சமாதி அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிஹனீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் . இவரது மனைவி ரஞ்சனா. கடந்த ஞாயிற்றுக் கிழமை குடும்பத் தகராறில் ரஞ்சனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரின் உடல் அங்குள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமை படுத்தியதாலேயே ரஞ்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு அவரின் கணவரே காரணம் எனவும் ரஞ்சனாவின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதனால் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக மனைவி தற்கொலைக்கு தன்னை குற்றம் சாட்டியதால் சோகத்தில் இருந்த சந்திர பிரகாஷ் மனைவி இறந்த மறுநாளே அதாவது திங்கள் கிழமை ரஞ்சனா புதைக்கப்பட்ட சமாதி அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சந்திர பிரகாஷின் உடலை கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து அவரின் உறவினர்கள் சந்திர பிரகாஷின் தற்கொலைக்கு காரணமாக ரஞ்சனாவின் உறவினர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். எது எப்படியோ  பேசி தீர்க்க வேண்டிய கணவன் மனைவியின் சிறிய பிரச்சனையை பெரியதாக்கியதோடு  , மனைவி தற்கொலை செய்து கொண்டு தனது கணவரும்  உயிரிழக்க காரணமாகியுள்ளார்.  புறம் பேசும் உறவினர்களின் முட்டாள்தனத்தால் ஒரு குடும்பம் அழிந்து போனதென்னவோ உண்மை.