அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள் 

0
71
PMK _ 2 treasurers?? Ramadoss and Anbumani announcement!!
PMK _ 2 treasurers?? Ramadoss and Anbumani announcement!!

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள்

பாமகவில் அப்பா-மகன் மோதல் உச்சம் எட்டுகிற தருணத்தில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னெடுக்கவுள்ள “உரிமை மீட்பு பயணம்” திடீரென சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உரிமை மீட்பு பயணம்:

அன்புமணி, ஜூலை 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபயணமாக உரிமை மீட்பு பயணம் மூலமாக மக்களை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10 முக்கிய அடிப்படை உரிமைகள் — சமூக நீதி, வேலை, கல்வி, நலவாழ்வு, நல்லாட்சி, விவசாயம், பெண்கள் பாதுகாப்பு, சீரான நகர வளர்ச்சி, போதை எதிர்ப்பு உரிமை மற்றும் சுற்றுசூழல் ஆகியவை திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மக்களுக்கு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

“இந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே பயணம் மேற்கொள்கிறேன்” என சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார் அன்புமணி.

ராமதாஸ் தரப்பில் எதிர்ப்பு!

இது ஒரு புறம் இருக்க, அப்பா-மகன் இடையேயான அதிகார மோதல் சார்ந்த முரண்பாடுகள் தற்போது உச்ச கட்டத்திற்கு வந்துள்ளன. பாமக நிறுவனரும் மூத்த தலைவருமான ராமதாஸ், இந்த பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிபியிடம் நேரில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியுள்ள விவரங்கள்:

  • கட்சியின் நிறுவனர் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் பயணத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது.

  • பாமக கட்சி கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை இந்த பயணத்தில் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.

  • பொதுமக்களை சந்தித்து கருத்து பரப்பும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.

குழப்பத்தில் தொண்டர்கள்

இந்த உரிமை மீட்பு பயணம் மற்றும் அதிகாரப்பூர்வ எதிர்ப்புகள், பாமகவின் உள்கட்சிப் பிரச்சனை மற்றும் இரட்டை தலைமையைப் பற்றிய வதந்திகளை மேலும் வலுப்படுத்துகின்றன. கட்சித் தொண்டர்களிடையே இது மேலும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.தந்தை-மகன் இடையேயான அதிகாரப் போட்டியானது, பாமக கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றும் நிலையில் உள்ளது.

அன்புமணியின் “உரிமை மீட்பு பயணம்” அதிகாரபூர்வமான கட்சி நடவடிக்கையா? இல்லையா? அதற்கு அவரது தந்தையும் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் எதிர்ப்பது ஒரு அரசியல் முடிவா அல்லது குடும்ப ரீதியான பிளவா? என்பது தற்போது முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.

மக்கள் உரிமைக்கான போராட்டமா? அல்லது பாமகவின் பிளவுக்கான தொடக்கமா?
அடுத்த சில நாட்களில் இதற்கான தெளிவான பதில் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அன்புமணியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

Previous articleதிமுக வெறும் 20 தொகுதிகளில் தான் வெற்றி! படு தோல்வியை சந்திக்கும் என அண்ணாமலை பேச்சு 
Next articleநான் அப்படி சொல்லவே இல்லையே! திருமாவை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி!