விஜய்க்கே தெரியாமல் மகனிடம் ஒப்பந்தம் லைக்கா – கடும் கோபத்தில் தளபதி!

0
36

விஜய்க்கே தெரியாமல் மகனிடம் ஒப்பந்தம் லைக்கா – கடும் கோபத்தில் தளபதி!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். குழந்தை முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். 50 வயதை கடந்த போதிலும், அவரது அழகும், நடனமும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறது.

தற்போது நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘தளபதி 68’ படத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும்  இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இயக்குநராக நடிகர் விஜய் மகன் சஞ்சய் களமிறங்க உள்ளதாகவும், அவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகமாகுவதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்திருக்கிறது.

தற்போது இச்செய்திதான் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்னொரு தகவலும் தற்போது ரசிந்தள்ளது.

அதாவது, விஜய் மனைவி சங்கீதாவின் அப்பாவும், லைக்கா சுபாஷ்கரனின் அப்பாவும் நண்பர்களாம். அதனால், விஜய் மகன் சஞ்சய்க்கு இந்த வாய்ப்பை லைக்கா கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதில் என்ன விஷயம் என்றால், லைக்கா மூலம் மகன் படம் இயக்கப்போவது விஜய்க்கே  தெரியாதாம். இதனால், லைக்கா மீது விஜய் கோபமாக இருப்பதாக தகவல் ரசிந்துள்ளது. லைக்கா தயாரிப்பில் வெளியான ‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் லைக்காவிற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. விஜய்யின் கால்ஷீட்டிற்காக பல வருடங்களாக லைக்கா காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கே தெரியாமல் லைக்கா இப்படி மகனுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால் கோபத்தில் உள்ளாராம் விஜய்.

கடந்த சில வருடங்களாகவே விஜய் மனைவி சங்கீதா, மகள், மகனுடன் லண்டனில்தான் வாழ்ந்து வருகிறார். தற்போது விஜய் அவருடைய அப்பாவிடமும் பேசுவது கிடையாது. தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

இதற்கு பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
Gayathri