மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. மேல்முறையீடு செய்ய போறீங்களா? அப்போ இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

0
39
#image_title

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. மேல்முறையீடு செய்ய போறீங்களா? அப்போ இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.முன்னதாக விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பெற ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட முகாம்,ஆகஸ்ட் 5 முதல் 12 அம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்பட்டன.இந்த முகாமில் விண்ணப்பம் பதிவு செய்யாத மகளிர்களுக்கு ஆகஸ்ட் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 1.70 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.இதில் சுமார் 70 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.

மேலும் மனு நிராகரிப்பட்டதற்கு காரணம் குறித்த விவரம் சம்மந்தப்பட்ட மகளிருக்கு அரசு தரப்பில் இருந்து தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற இறுதி குறுஞ்செய்தி வருகின்ற செப்டம்பர் 18 அன்று விண்ணப்பம் செய்த அனைத்து மகளிரின் தொலைபேசி எண்ணிற்கும் தமிழக அரசு அனுப்பி வைக்க உள்ளது.

மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால்,தமிழக அரசு அனுப்பிய குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.இந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என்று தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

மேல் முறையீடு செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை:

1.தங்களிடம் கார்,டிராக்டர்,லாரி உள்ளிட்ட வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

2.விண்ணப்பிக்கும் பெண் மற்றும் அவரது கணவர் அரசு வேலையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

3.மேல் முறையீடு செய்யும் பெண்கள் தங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துளீர்களா என்பதை பார்க்கவும்.

4.குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லச்சத்திற்கும் கீழ் இருக்கிறதா எனபதை உறுதி செய்ய வேண்டும்.

5.வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி,ஜிஎஸ்டி செலுத்துபவர்கள் என்றால் இத்திட்டத்தில் பயன் பெற முடியாது.

6.மத்திய அரசு,மாநிலஊழியர்கள்,பொதுத்துறை நிறுவனங்கள்,வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள்,உள்ளாட்சி அமைப்புகள்,கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்,ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் என்றால் இத்திட்டத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது.

7.ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP),விதவை ஓய்வூதியம்,அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் என்றால் மேல்முறையீடு செய்ய முடியாது.

8.ஆண்டிற்கு 3500 யூனிட்க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தின் பெண்கள் இத்திட்டத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது.