சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ!

0
111

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ!

இந்த உலகில் பெரும்பாலான மக்கள் வழிபடும் தெய்வம் என்றால் அது சிவ பெருமான் என்று கூறலாம்.இவர் மும்மூர்த்திகளில் ஒருவர்.சிவபெருமான் மிக கோபம் கொண்ட கடவுள் என கூறப்படுகிறது.மேலும் இவர் அழிக்கும் வேலைகளை செய்பவர்.

சிவ பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு அவர் மிக அமைதி கொண்டவர். தீய எண்ணங்கள்,தீய வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அவருடைய கோவத்தை காண்பிப்பார்.

பொதுவாக எந்த கடவுளுக்கு என்ன பொருள் வைத்து வழிபாட்டால் அதீத நன்மை கிடைக்கும் என ஒரு சிலருக்கு தெரியும்.அந்த வகையில் சிவ பெருமானிற்கு எந்த பொருள் வைத்து வழிபடலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

குங்குமப்பூ:குங்குமப்பூ என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.இவை ஆரோக்கியத்திற்கு பயன்படுத்த படுகின்றது.குங்குமப்பூ சிவனுக்கு மிக பிடித்த பொருள் என கூறப்படுகிறது.குங்குமப்பூ கொண்டு சிவனை வழிபட்டால் நம் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

தயிர்:தயிர் என்பது அனைத்து கடவுள்களுக்கும் படைக்கப்படும் பொருள்.உங்கள் வாழ்வில் அமைதி மற்றும் பொறுமை நிலைக்க வேண்டும் என்றால் சிவனிற்கு தயிர் வைத்து வழிபடலாம்.

பசு நெய்:சுத்தமான பசும்பாலில் இருந்து தாயரிக்கப்பட்ட நெயினால் மட்டுமே சிவனை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடும் பொழுது உங்கள் வாழ்வில் வெற்றி ,வலிமை கிடைக்கும்.

author avatar
Parthipan K