தீராத கடன் பிரச்சனையை தீர்க்க பேப்பரில் இதை எழுதுங்கள்!! ஆன்மீக உண்மை!!

0
121

தீராத கடன் பிரச்சனையை தீர்க்க பேப்பரில் இதை எழுதுங்கள்!! ஆன்மீக உண்மை!!

பலரும் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதனை சேகரிக்க முடியாமல் கடன் மற்றும் இதர செலவுகள் என செலவாகி கொண்டே வரும். அவர் இருப்பவர்கள் வழிபாடுகள் மூலமாகவும் ஆன்மீக குறிப்புகள் மூலமாகவும் கடனில் இருந்து விரைவிலேயே மீண்டு வரலாம். இந்த பதிவில் வரும் எளிய பரிகாரத்தை பின்பற்றுவதன் மூலம் தீர்க்கவே முடியாத அனைத்து கடன் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அதுமட்டுமின்றி பணவரவை அதிகரிக்க செய்யக்கூடும். இந்த பதிவில் வருவதை ஒரு பேப்பரில் எழுதி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் போதும், அதிர்ஷ்டமானது நம்மை தேடி வரும். ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெள்ளை பேப்பரில் சுவஸ்திக் முத்திரை போட வேண்டும். இந்த ஸ்வஸ்திக் முத்திரையை பெரும்பாலும் பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஏனென்றால் லாபம் தரும் குறியீடாக தான் இது பார்க்கப்படுகிறது. ஒரு பேப்பரில் ஸ்வஸ்திக் முத்திரையை வரைய வேண்டும். பின்பு கீழ் திசையில் கடன் தீர வேண்டும் என எழுத வேண்டும். இடது பக்கம் சுபம் என்றும் வலது பக்கம் லாபம் என்றும் எழுத வேண்டும். கடன் பிரச்சனை மட்டுமின்றி பணம் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் கீழே எழுதலாம். இதனை பணம் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். தினம் தோறும் இதனை நீங்கள் பார்த்து வர வேண்டும். இவரை ஸ்வஸ்திக் முத்திரையை பார்த்து வருமாறு நீங்கள் கேட்கும் கோரிக்கை நிறைவேற்றப்படும். அதேபோல ஸ்வஸ்திக் சக்கரத்தின் உள் நான்கு பக்கமும் புள்ளி வைக்க வேண்டும். புள்ளி வைக்காமல் சுவஸ்திக் சக்கரம் போட்டால் அது வேறு பலனை அளிக்கும். குறிப்பாக இதனை நீங்கள் வளர்பிறை கிருத்திகை நாட்களில் செய்யலாம். மாலை நேரங்களில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. விடியற்காலை போன்ற நேரத்தில் செய்வது மிகவும் நல்லது.