Pm-kisan உதவித்தொகை பெறும் விவசாய நீங்கள்! இதோ 12 வது தவணை தொகைக்கான முக்கிய தகவல்!
மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 11 தவணை முறையில் பணம் போடப்பட்டுள்ளது.
12வது தவணை இன்றளவும் போடப்படவில்லை. அந்த பன்னிரண்டாவது தவணை குறித்து விவசாயிகள் பெருமளவு காத்துக் கொண்டுள்ளனர். பி எம் கிசான் திட்டத்தின் இதுவரை எவ்வளவு தொகை போடப்பட்டுள்ளது ஆன்லைன் மூலமாகவே பார்த்துக் கொள்ளும் வசதியை கொண்டு வந்துள்ளனர். முன்பெல்லாம் வங்கி கணக்கு மூலம் சரி பார்த்து வந்த வேலையில் தற்போது அமல்படுத்தியுள்ள இந்த புதிய முறை மிகவும் எளிதானதாக உள்ளது.
பயன்படுத்த கட்டாயமாக ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை பிஎம் கிசான் போர்ட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் கீழ் உள்ள விவசாயிகள் அனைவரும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று மொபைலின் மற்றும் பதிவு எண்ணை அப்ளை செய்ய வேண்டும். இதனை அடுத்து pm kisan கணக்குடன் இணைத்து கொள்ளலாம்.வரும் OTP எண்ணையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்