Crime

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாடக காதல் மூலமாக இளம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி பாலியல் உறவு வைத்ததோடு, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கோழி வியாபாரியான தங்கபாண்டியன் என்பவரின் மகன் தான் காசி என்ற சுஜி. 26 வயதாகும் இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இவர் கடந்த பத்து ஆண்டுகளில் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக உள்ளூர் முதல் வட இந்தியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளம்பெண்களிடம் ஆரம்பத்தில் நண்பராக அறிமுகமாகி, பின்னர் ஆசையாக பேசி காதலிப்பதாக கூறி தன்னுடைய வகையில் விழ வைத்துள்ளார்.பின்னர் அவர்களை நம்ப வைத்து தான் விரும்பும் வகையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொடர்பு வைத்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் இவருடன் பழகிய பெண்களுக்குத் தெரியாமலேயே அவர்களுடன் தனியாக இருப்பதை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் படித்து கொண்டிருந்த போது அவரது வலையில் சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் விழுந்து, இருவரும் பல்வேறு இடங்களுக்கும் சென்று விருப்பப்படி ஊர் சுற்றி வந்துள்ளனர்.

இதனையடுத்து கல்லூரி படிப்பை முடித்த அவர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல தன்னுடன் பழகிய அந்த பெண் மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் காசி. இவரின் மிரட்டலுக்கு பயந்து ஆரம்பத்தில் பணம் கொடுக்க ஆரம்பித்த அந்த பெண் ஏறக்குறைய பல லட்சம் வரை அவருக்கு கொடுத்துள்ளார். ஒரு நிலைக்கு மேல் பணம் கொடுக்க முடியாது என்று அந்த பெண் மருத்துவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர் அந்த பெண்ணுடன் இருந்த ஆபாச படம் மற்றும் வீடியோக்களை தன் நண்பர்களிடம் கொடுத்து சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலமாக பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனையடுத்து நிலைமையை சுதாரித்து கொண்ட அந்த பெண் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சுஜியின் செல்போன்,லேப்டாப் உள்ளிட்ட பல ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது இதேபோல இவர் ஏற்கனவே பல பெண்களிடம் ஒன்றாக இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமயம் பார்த்து அவர்களிடம் காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

பின்னர் சம்பந்தபட்ட அந்தப் பெண்களின் மொபைல் எண்களை தன்னுடைய நண்பர்களுக்குக் கொடுத்து பேச வைத்து தன்னை அந்த பெண்களிடமிருந்து விடுவித்துக் கொள்வது இவரது வழக்கமாக இருந்துள்ளது. இதனையடுத்து இவர் யாரையெல்லாம் ஏமாற்றி பணம் பறித்துள்ளர் என்பது குறித்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment