நாய்குட்டிகளை சைடிஷாக வைத்து மது அருந்திய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்! 

0
261
Youngsters who drank alcohol with puppies as sides! Sensational incident!
Youngsters who drank alcohol with puppies as sides! Sensational incident!

நாய்குட்டிகளை சைடிஷாக வைத்து மது அருந்திய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்!

உத்தரப்பிரதேசம் பரேலி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவருடைய நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.அப்போது அவர்களுக்கு அருகில் இரண்டு நாய்க்குட்டிகள் இருந்தது.அதனை போதையில் இருந்தவர்கள் பிடித்து காதுகள் மற்றும்  அதன் பிறகு வாலையும் துண்டாக்கியுள்ளனர்.அதன்பிறகு நாய் குட்டிகளில் வால் மற்றும் காதுகளை உப்பு தடவி அதனை மதுவில் நனைத்து சாப்பிட்டுள்ளார்.

காது மற்றும் வால் நறுக்கப்பட்ட நாய்க்குட்டிகள் இரண்டும் வலியில் துடித்து கதறி சத்தமிட்டது.அதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அக்கம் பக்கத்தினர் வந்ததும் அந்த இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.மேலும் பொதுமக்கள்  பிராணிகள் நல வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பிராணிகள் நல வாரியத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய்குட்டிகளை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் நாய் குட்டிகளை கொடூரமாக சித்தரவதை செய்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். தப்பி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப[அடுத்தியுள்ளது.

Previous articleநூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்!
Next articleஅண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு!! டிசம்பர்-20 கடைசி தேதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here