ருசியோ ருசி! எச்சில் ஊற வைக்கும் கோழி கறி வறுவல்!!

0
26
#image_title

ருசியோ ருசி! எச்சில் ஊற வைக்கும் கோழி கறி வறுவல்!!

நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று கோழி.இவற்றில் சில்லி,குழம்பு,கிரேவி, வறுவல் உள்ளிட்ட பல உணவுகளை சமைக்க முடியும்.இந்த கோழி கறியில் மிகவும் ருசியாக வறுவல் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி செய்தால் கோழி வறுவல் மணமாகவும்,மிகவும் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கோழி இறைச்சி – 1/2 கிலோ

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1கொத்து

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*இஞ்சி,பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

*சின்ன வெங்காய விழுது – 2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*தக்காளி – 1 (நறுக்கியது)

*கரமசால் – 2 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

*பெரிய வெங்காயம் – பாதி நறுக்கியது

செய்முறை:-

1.ஒரு’பாத்திரம் எடுத்து அதில் கோழி இறைச்சியை போட்டு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி அலசி கொள்ள வேண்டும்.

2.அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

3.பிறகு சின்ன வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

4.பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் பேறில்லையா வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

5.அலசி வைத்துள்ள கோழி இறைச்சியை சேர்த்து அதில் மஞ்சள் தூள்,உப்பு,மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

6.பிறகு கரமசால்,கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

7.அவை நன்கு சுண்டி வந்தததும் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கவும். இப்படி செய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து உண்பார்கள்.