ஐபிஎல் தொடரில் தங்கள் திறமையை காட்டுவதற்கு பயனளிப்பதாக இருக்கும்

0
69
PUNE:Indian bowler Ashish Nehra celebrates the wicket of Sri Lankan batsman Danushka Gunathilake during the first T20 match played in Pune on Tuesday. PTI Photo by Shashank Parade(PTI2_9_2016_000255A)

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கடந்த மே மாதமே இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்க வேண்டிய நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்தில் மாற்றப்பட்டு அடுத்த மாதம் 19 ந் தேதி நடைபெறுகிறது.

அது மட்டும் இல்லாமல் இந்த மாதம் 18 ந் தேதி கரிபியன் லீக் தொடங்க உள்ளது. இது குறித்து ஆஷிஷ் நெஹ்ரா பேசும்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு முன் இந்த போட்டி அனைத்து வீரர்களுக்கும்  நம்பிக்கை அளிக்கும் என்று கூறினார். மேலும் ஐ.பி.எல் தொடரின் முக்கிய வீரரான பொல்லார்டு, இம்ரான் தாஹிர் மற்றும் ரஷித் கான் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள். இது அவர்களுக்கு ஐபிஎல் தொடரில் தங்கள் திறமையை காட்டுவதற்கு பயனளிப்பதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

author avatar
Parthipan K