1 நாளில் வெள்ளைப்படுதல் குணமாகும்.. பசும்பாலுடன் இதை மட்டும் சேர்த்து குடியுங்கள்!!

0
127

1 நாளில் வெள்ளைப்படுதல் குணமாகும்.. பசும்பாலுடன் இதை மட்டும் சேர்த்து குடியுங்கள்!!

பெண்கள் பலர் வெள்ளைப்படுதல் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.ஹார்மோன் பிரச்சனை,பிறப்புறுப்பு பாதிப்பு,முறையற்ற மாதவிடாய் போன்ற காரணங்களால் வெள்ளைப்படுதல் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பு இனி வராமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியக் குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை மடல்

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதனுள் இருக்கின்ற ஜெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் குளிர்ந்த நீர் விட்டு 9 முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு சுத்தமான மிக்ஸி ஜார் எடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் கற்றாழை ஜெல்லை அதில் போட்டு மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு காய்ச்சவும்.எண்ணெய்+கற்றாழை ஜெல் நன்கு சுண்டும் அளவிற்கு காய்ச்சவும்.

பிறகு அடுப்பை அணைத்து தைலத்தை ஆற விடவும்.இந்த தைலத்தை பிறப்புறுப்பு பகுதியில் அப்ளை செய்து வந்தால் வெள்ளைப்படுதல் பாதிப்பு சரியாகும்.அது மட்டுமின்றி வெள்ளைப்படுதலால் ஏற்படக் கூடிய தொற்றுக் கிருமிகள் முழுமையாக நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)மலை நெல்லிக்காய்
2)கடுக்காய்
3)தான்றிக்காய்

செய்முறை:-

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா சூரணம் வாங்கி கொள்ளலாம்.அல்லது மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சம அளவு வாங்கி நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளலாம்.

இந்த பொடியை ஒரு கிளாஸ் சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கீழாநெல்லி
2)பசும்பால்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லியை நீரில் அலசி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும்பால் ஊற்றி சூடாக்கவும்.இந்த பாலில் அரைத்த கீழாநெல்லி பேஸ்ட் சேர்த்து கலக்கி குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.