14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம்! சிறுமியின் தாய் கைது!

0
96
14 year old girl gets married and gets pregnant The girl's mother arrested!
14 year old girl gets married and gets pregnant The girl's mother arrested!

14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம்! சிறுமியின் தாய் கைது!

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் என்னும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் அந்தப் பெண்ணின் கணவன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனது 14 வயது மகளுடன்  தனியாக வசித்து வந்தார்.அந்த பெண்ணுக்கு வேலூர் கருகம்பத்தூரைச் சேர்ந்த 35 வயதுடைய ஞானசேகர் என்பவர் உடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. தன்னை விட ஐந்து வயதில் சிறியவனாக இருந்த போதிலும் ஞானசேகரனை அந்தப் பெண் மறுமணம் செய்து கொண்டார்.

இவர்களுடன் ஞானசேகரன் அண்ணனான லோகநாதன் என்பவரும் அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார். லோகநாதன் ஒரு ஆட்டோ ஓட்டுனர். இந்நிலையில் தனது தம்பி மறுமணம் செய்துகொண்ட பெண்ணின் 14 வயது மகளை திருமணம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். அக்குழந்தையின்அம்மா இதற்கு சிறிது கூட மறுப்பு தெரிவிக்காமல் தனது 14 வயது குழந்தையை ஆட்டோ ஓட்டுனர் லோகநாதனிற்க்கு தனது வீட்டிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார்.

சிறிது காலம் கழித்து அந்த 14 வயது குழந்தைகே கர்ப்பம் அடைந்தது. இந்த ரகசிய தகவலை அறிந்த அக்கம் பக்கத்தினர் வேலூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தவர்கள் தகவல் அறிந்த காவல் நிலைய போலீசார் 14 வயது சிறுமியின் தாய் மற்றும் அவரது கணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் லோகநாதன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இச்சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K