வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை!

0
144
#image_title

காக்களூர் மாருதி நியூ டவுன் வள்ளலார் தெருவைச் சேர்ந்த சரண்யா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை. நகையை கொள்ளை அடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் எல்மேட் கொள்ளையன் சிசிடிவி காட்சிகள் மூலம் திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை.

திருவள்ளூர் அருகே காக்களூர் மாருதி நியூ டவுன் வல்லலார் தெருவை சேர்ந்த சரண்யா இவரது கணவர் மேஷாக் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றனர்.

நேற்று அவரது கணவர் மேஷாக் மட்டும் அந்த ஆந்திராவிலிருந்து பணி காரணமாக வீட்டிற்கு வந்த நிலையில் அவரிடம் மனைவி சரண்யா அவர் அணிந்திருந்த நகைகளை வீட்டில் பத்திரமாக வைக்க சொல்லி கொடுத்து அனுப்பிய நிலையில் நகைகளை வீட்டில் வைத்து விட்டு பணிக்குச் சென்ற மேஷாக் மாலை மனைவி வந்து பார்க்கும் போது வீட்டு கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தார்.

பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது இதை அடுத்து காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் பொறுத்திருந்த சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்தபோது சரண்யா வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் வெகு நேரம் காத்திருந்து வீட்டுக்குள் சென்று மீண்டும் வரும்போது இருசக்கர வாகனத்தில் சிறிய மூட்டை ஒன்று எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தன.

இந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஹெல்மெட் கொள்ளையனை  தேடி வருகின்றனர்.