Breaking News

திருட்டு போன மோட்டர் சைக்கிள் 17 வயது சிறுவன் கைது போலீஸ் விசாரணை !!

17-year-old boy arrested for stolen motorcycle, police investigation!!

திருட்டு போன மோட்டர் சைக்கிள் 17 வயது சிறுவன் கைது!! போலீஸ் விசாரணை !!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆண்டாங்கோவில் பெரியசாமி நகரில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து பாலாஜி கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்  நடத்திய விசாரணையில் 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

இதனால் போலீசார் சிறுவனை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.