Breaking News

48 ஆயிரத்தை கடந்த 22 கேரட் தங்கம்! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

48 ஆயிரத்தை கடந்த 22 கேரட் தங்கம்! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

சென்னை,

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வபோது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக இதன் விலை சற்று ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

கூடிய விரைவில் ரூ.6 ஆயிரத்தை தொட்டு விடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வந்த நிலையில் இன்று ஒரு கிராம் ரூ.6,015க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களில் தங்கம் விலை மளமளவென உயர்ந்து இருக்கிறது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் நகைக் கடைகளை நோக்கி மக்கள் கூட்டம் படையெடுக்கிறது.

நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5,930க்கும் ஒரு சவரன் ரூ.47,440க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று அதன் மளமளவென அதிகரித்து இருக்கிறது.

அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.680 அதிகரித்து, ரூ.48,120க்கும், ஒரு கிராம் ரூ.85 அதிகரித்து ரூ.6,015க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.744 அதிகரித்து ரூ.52,496க்கும் விற்பனையாகின்றது.

அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.78.20க்கும், ஒரு கிலோ ரூ.78,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.