தனியார் விடுதியில் கவர்ச்சி ஆடையில் சிக்கிய 30 இளம்பெண்கள்! திடிரென்று ரெய்டு போன போலீஸ்!

0
80

தனியார் விடுதியில் கவர்ச்சி ஆடையில் சிக்கிய 30 இளம்பெண்கள்! திடிரென்று ரெய்டு போன போலீஸ்!

தற்பொழுது ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுவிற்கு அடிமையாகும் அவலம் வந்துவிட்டது. பள்ளி படிக்கும் மாணவிகளே பலர் பள்ளி சீருடையில் இருக்கும் பொழுதே புகை மற்றும் மது குடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி தமிழ்நாட்டையே பரபரப்பாகியது. அந்த வகையில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி பாமக தலைவர் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் வருகிறார்.

இரவு நேரங்களில் 10 மணிக்கு முன்பே பார்கள் மூடப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. 10 மணிக்கு மேலாக பார்களில் எந்தவித மது விருந்துகளும் நடத்தக்கூடாது. அதேபோல நடன நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. ஆனால் தற்பொழுது வரை சென்னையில் பல பகுதிகளில் இந்த தடையை எல்லாம் மீறி மது விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி வழக்கமாக நடைபெற்று தான் வருகிறது.

அந்த வகையில் சென்னையில் பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் விதிகளை மீறி மது விருந்து நடப்பதும் பெண்கள் கவர்ச்சியாக நடனம் ஆடுவதும் வழக்கமான ஒன்றாக நடந்து வந்துள்ளது. இவ்வாறு விடுதியில் நடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் அந்த விடுதிக்கு சென்று திடீரென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது 30க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் அங்குள்ள ஆண் நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த போலீசார் அங்கு நடந்த பார்ட்டியை தடுத்து நிறுத்தி மது போதையில் இருந்த 30 பெண்களுக்கும் அறிவுரை கூறியுள்ளனர். பின்பு அவர்களை பத்திரமாக ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளனர்.

இரவு 10 மணிக்கு மேல் மது விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கக்கூடாது என்ற தடையை மீறி அந்த விடுதி நடந்து கொண்டது. அதனால்போலீசார் அந்த விடுதி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்பொழுது விடுதி நிர்வாகிகளிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.