நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

0
81

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் தற்பொழுது ரேஷன் கடைகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லை. அதனால் பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சுமார் 4000 பணியாளர்களின் தேவை உள்ளது. மேலும் கட்டுநர் பணியிடங்களுக்கும் பணியாளர்களின் தேவை உள்ளது. இந்த பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் நியாய விலை கடைகளில் 4000 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் பணியிடங்களை அந்தந்த மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே போதுமானது. மேலும் 12 ஆம் வகுப்பிற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருந்தாலும் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என தெரிவித்துள்ளனர்.தகுதி உடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு அலவலகத்தை தொடர்புகொள்ளலாம்.