5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!! 

0
40

5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!!

 

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார்.

 

சென்னை அம்பத்தூர் அருகே, 5 ஆம் வகுப்பு மாணவிகளிடம்,பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.கொரட்டூர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பழனிவேல்(56) என்பவர்,துணை தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்,அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஆபாசமாக பேசி வந்துள்ளார்.

 

இந்நிலையில் ஆசிரியரின் பாலியல் சீண்டல் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இதை கேட்டு பெற்றோர் மிரண்டுள்ளனர்.இதனை தொடர்ந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் தெரிவித்தும் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்து மாணவியின் பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையில் புகார் செய்தனர்.இந்நிலையில் காவல் துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்தனர்.இந்த விசாரணையில் பழனிவேல் மாணவிகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது,பாடம் நடத்தும் பொழுது மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளில் பேசுவது போன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிந்தது.

மேலும் ஆசிரியர் பழனிவேலின் செல் போனை கைப்பற்றி மாணவிகள் குறித்த வீடியோ பதிவு,புகைப்படம் ஏதோனும் வைத்துள்ளாரா என்று காவல் துறையினர் தற்பொழுது ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பள்ளி மாணவர்களை நல்வழி படுத்த வேண்டிய ஆசிரியரே,தவறான செயலில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் தீயாக பரவி அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.மேலும் “வேலியே பயிரை மேய்வது போன்று” நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும்,கலக்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.