ஒரே ஊரில் தொடர்ந்து மக்களை கடித்து வரும் விசித்திரமான பாம்பு?பழி வாங்கும் எண்ணமா?

ஒரே ஊரில் தொடர்ந்து மக்களை கடித்து வரும் விசித்திரமான பாம்பு?பழி வாங்கும் எண்ணமா?

திருச்சூர் அருகே கய்ப்பமங்கலம் சளிங்காட்டை சேர்த்தவர் தான் புதூர் பரம்பில் ரசாக்.இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார்.இவருடைய மனைவி ஷப்னா.இந்த தம்பதிக்கு திருமண ஆகி இரண்டு ஆண்டுகள் ஆனா நிலையில் ஒரு மகள் உள்ளார்.

மகளின் பெயர் சப்ரா பாத்திமா.தொடர் மழைகாலம் என்பதால் அவரது வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்கி நிற்கும்.அதனால் பூச்சி மற்றும் விஷம் கொண்ட உயிரினம் என பல வகையான வண்டுகள் வர ஆரம்பித்து விட்டன.இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி அவர்களது ஒரே மகள் ஆகிய மூன்று பெரும்  வீட்டில் உறங்கி கொண்டிருந்தார்கள்.

அந்நேரமாக பார்த்து விஷம் கொண்ட பாம்பு ஒன்று ரசாக் மற்றும் அவரின் மனைவியின் கைகளிலும் அவரது ஒரே பிள்ளை சப்ரா பாத்திமாவை காலிலும் பாம்பு கடித்து விட்டு  சென்றது.

வலியில் துடித்து போன அவர்களை பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.தொடர்ந்து அப்பகுதியல் மக்களை பாம்பு கடித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment