கர்ப்பம் தரித்த நான்கு மாதம் ஆகிவிட்டதா!! தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!!

0
178

கர்ப்பம் தரித்த நான்கு மாதம் ஆகிவிட்டதா!! தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!!

பொதுவாகவே பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அவரது உடல் நிலையை மாற்றம் ஏற்படும். அதேபோல மருத்துவரின் அறிவுரை இன்றி தாமாகவே வீட்டு வைத்தியம் என்று எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. கர்ப்பமாக உள்ளவர்கள் அதிக அளவு காபி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இது அதிக அளவு சூட்டை உண்டாக்கும். அதுமட்டுமின்றி குழந்தையின் இதயத் துடிப்பை அதிகரிக்க செய்யும். அதேபோல உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் ஏதேனும் நீங்கள் வளர்த்தால் அதனிடமிருந்து சற்று தள்ளியே இருங்கள். அந்த செல்லப்பிராணிகளை குளிப்பாட்டுவது அதிக நேரம் விளையாடுவது என்பதை எல்லாம் தவிர்த்து விடலாம். ஏனென்றால் அவற்றிடம் இருந்து ஏதேனும் ஓர் ஒற்றுமையை நீங்கள் நுகர்ந்து விட்டால் அது குழந்தைக்கு பிரச்சனை ஏற்படும். முதல் மூன்று மாதங்களில் அதிக சூடு உள்ள தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். கடைகளில் இருந்து இறைச்சி வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பதை சுவாசிப்பதால் குழந்தையின் எடை குறைந்து பிறக்கும். அதனால் ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் நீங்கள் இருப்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.