தீராத 12 வகை நோய்களுக்கும் இந்த ஒரு காய்தான் தீர்வு!!

0
250
#image_title

தீராத 12 வகை நோய்களுக்கும் இந்த ஒரு காய்தான் தீர்வு!!

தினமும் கேரட் உண்பதால் எந்தெந்த நோய்களை தடுக்கலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

கேரட்டில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின் மற்றும் லியூட்டின் என்ற ஆன்டிஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதால் இது கண் பார்வைக்கு மிகவும் சிறந்த உணவாக உள்ளது.

மேலும் இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் லியூட்டின் கண்ணில் ஏற்படக்கூடிய மாலைக்கண் நோய், கண் புரை, மற்றும் கண் அழுத்த நோய் ஆகியவை வராமல் தடுக்கிறது.

தினமும் மதிய உணவு எடுத்துக் கொள்ளும் போது அரை கப் அளவு இந்த கேரட்டை நாம் சேர்த்து வந்தால் நம் உடம்பிற்கு தேவையான 73% வைட்டமின் ஏ சக்தியை இது தருகிறது.

கேரட் கண்களுக்கு மட்டுமல்லாமல் நிறைய நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

1. தினமும் குழந்தைகளுக்கு கேரட் கொடுத்து வர மூளை உறுப்பு நன்கு சுறுசுறுப்பாக செயல்பட்டு குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

2. இதயத்தில் ஏற்படும் நோய்களை தடுத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் கேரட் பயன்படுகிறது.

3. புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கக்கூடிய தன்மையும் கேரட்டில் உள்ளது.

4. கேரட்டை தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் முகம் பிரகாசமாகவும் பொலிவுடன் காணப்படும்.

5. மேலும் முகத்தில் ஏற்படக்கூடிய சரும சுருக்கங்களையும் இது வரவிடாமல் தடுக்கும்.

6. இதில் வைட்டமின் சி என்ற ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் இதை தினமும் சாப்பிடும் போது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

7. கல்லீரல் உறுப்பு ஆரோக்கியமாக செயல்படவும் இது உதவியாக இருக்கிறது.

8. கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

9. கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்காமல் பச்சையாக சாப்பிடுவது தான் உடம்பிற்கு மிகவும் நல்லது.

10. மலச்சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

11. உடல் பருமனை குறைக்க எடுத்துக் கொள்ளும் டயட் உணவுகளில் கேரட்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

12. எலும்புகள் தேய்மானம் அடைவதை தடுத்து எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது.