சுவையான கேரளா குழாய் புட்டு – எளிதாக செய்வது எப்படி?

0
159
#image_title

சுவையான கேரளா குழாய் புட்டு – எளிதாக செய்வது எப்படி?

புட்டு உணவுக்கு பெயர் போனவை கேரளா. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. அரிசி மாவு + தேங்காய் துருவல் + இனிப்பு சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*புட்டு மாவு(அரிசி மாவு) – 1 கப்

*தேங்காய் – 1/2 மூடி

*உப்பு – சிறிதளவு

*ஏலக்காய் – 2

*சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு அகலமான பவுல் எடுத்து அதில் 1 கப் அரசி மாவு(புட்டு மாவு) சேர்த்துக் கொள்ளவும். அதோடு சிறிதளவு உப்பு, தட்டி வைத்துள்ள 2 ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் மாவில் தண்ணீர் தெளித்து கெட்டியாகாமல் உதிரியாக பிசைந்து கொள்ளவும். பிறகு அந்த மாவை ஜல்லடையில் போட்டு சலித்து 5 நிமிடம் வரை அப்படியே வைக்கவும். பின்னர் 1/2 மூடி தேங்காய் எடுத்து அதை துருவி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து புட்டு மேக்கர் எடுத்து அதில் சிறிதளவு துருவிய தேங்காய் சேர்க்கவும். அதன் மேல் புட்டு மாவை போடவும். மீண்டும் புட்டு மாவு மேல் துருவிய தேங்காய் சேர்க்கவும். அதேபோல் புட்டு மாவு என்று மாறி மாறி சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் புட்டு மேக்கரை வெய்ட் போடும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்தால் 5 நிமிடத்தில் புட்டு ரெடி ஆகிவிடும்.

பிறகு புட்டு மேக்கர் மூடியில் இருந்து ஆவி வந்த பின் அடுப்பை அணைத்து விடவும். அடுத்ததாக தயார் செய்து வைத்துள்ள புட்டை மெதுவாக வெளியில் எடுக்கவும். இவ்வாறு செய்தால் கேரளா ஸ்டைல் புட்டு ருசியாக இருக்கும். இந்த குழாய் புட்டுடன் வாழைப்பழம் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.