30 நாட்களுக்கு #Noசர்க்கரை சேலஞ்ச்!!! இதில் கடைபிடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!!

0
81
#image_title
30 நாட்களுக்கு #Noசர்க்கரை சேலஞ்ச்!!! இதில் கடைபிடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!!
30 நாட்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் நமது உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளை சர்க்கரை விஷம் என்று நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். ஏன் இதை விஷம் என்று கூறுகிறார்கள் என்று யோசித்தால் அதில் உள்ள தீமைகளை வைத்துத்தான். வெள்ளை சர்க்கரையானது கரும்பு ஆலைகளில் இருந்து கடைசியாக பெறப்படும் கழிவில் ரசாயனப் பொருட்ஙளை சேர்த்து தயாரிக்கப்படுகின்றது.
இந்த வெள்ளை சர்க்கரையை நாம் காலையில் இருந்து இரவு வரை பயன்படுத்தி வருகின்றோம். அதாவது காலையில் எழுந்தவுடன் காபி, டீயுடன் இனிப்பு சுவைக்காக வெள்ளைச் சர்க்கரையை சேர்த்து பயன்படுத்துகின்றோம். மேலும் இரவோ அல்லது காலையிலோ எதாவது ஒரு. நேரத்தில் ரவை உணவாக செய்யும் பொழுது வெள்ளை சர்க்கரையை தொட்டி சாப்பிடும் பழக்கம் பலர் மத்தியில் இருக்கின்றது.
இந்த வெள்ளை சர்க்கரை நமது உடலில் பல தீமைகளை ஏற்படுத்துகின்றது. இதனால் நாட்டு சர்க்கரை நன்மைகளை மட்டுமே அளிக்கும் என்று கூற முடியாது. எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது அது நஞ்சுதான். இந்த பதிவில் 30 நாட்கள் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
30 நாட்கள் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல் இருந்தால் கிடைக்கும் நன்மைகள்…
* 30 நாட்கள் வெள்ளை சர்க்கரையை நாம் பயன்படுத்தாமல் இருந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.
* 30 நாட்கள் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல் இருந்தால் உடல் எடை தானாக குறையத் தொடங்கவும்.
* 30 நாட்கள் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல் வந்தால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது.
* கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நாம் இந்த 30 நாட்கள் NO சர்க்கரை சேலஞ்சை பின்பற்றலாம்.
* தொடர்ந்து 30 நாட்கள் நாம் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல் வந்தால் இதய நோய் குறைகின்றது.
* 30 நாட்கள் நாம் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தாமல் இருந்தால் இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைகின்றது.
* 30 நாட்கள் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல் இருப்பது நம்முடைய சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
* 30 நாட்கள் தொடர்ந்து சர்க்கரை பயன்படுத்தாமல் இருந்தால் குடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது. மேலும் குடல் இயக்கத்திற்கு உதவி செய்கின்றது.
* மேலும் 30 நாட்கள் நாம் சர்க்கரை பயன்படுத்தாமல் இருந்தால் நம் மனம் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.