ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களை வெளுக்க காத்திருக்கும் கனமழை!!

0
75
#image_title

ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களை வெளுக்க காத்திருக்கும் கனமழை!!

தமிழகத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் உள்ளிட்ட காரணங்களால் தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பொழிவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதேபோல் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் அங்கங்கே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையானது வருகின்ற 24 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் இந்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது.

ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:-

அதன்படி இன்று அதாவது நவம்பர் 22 ஆம் தேதி தமிழகத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை அதாவது நவம்பர் 23 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது. குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதேபோல் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.