போலி விளம்பரத்தை வெளியிட்ட காங்கிரஸ்? – சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!!

0
236
#image_title

போலி விளம்பரத்தை வெளியிட்ட காங்கிரஸ்? – சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!!

கர்நாடகாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கரஸிக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

அப்பொழுது, காங்கிரஸ்’கரப்சன் ரேட்’ 40 சதவிகிதம் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு போலி விளம்பரங்களை வெளியிட்டு பிரச்சாரம் செய்து அப்போது முதல்வராக இருந்த பாஜக பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்களை காங்கரஸ் இழிவு படுத்தியது.

காங்கிரஸ் வெளியிட்ட இந்த போலி விளம்பரத்தால் பாஜகவின் கவுரவம் பாதிக்கப்பட்டது என காங்கரஸிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரத்த நீதிமன்றம் வருகின்ற மார்ச் 28 ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.