அஜித்குமார் வழக்கில் அதிரடி திருப்பம்? சிறுநீரிலிருந்து வெளிவந்த ரத்தம்! சம்பவத்தை நேரில் பார்த்தவர் பேட்டி

0
102
A dramatic turn in Ajithkumar's case? Blood from the urine! An eyewitness interview
A dramatic turn in Ajithkumar's case? Blood from the urine! An eyewitness interview

தமிழ்நாட்டில் இப்போ திமுக ஆட்சிதான் நடக்குதா என்பது சந்தேகமாக உள்ளது. காரணம் கடந்த நான்கு வருடங்களாக திமுக ஆட்சியில் எத்தனையோ அவலங்களும், அட்டூழியங்களும் நடந்தபோதும் எந்த ஒரு ஊடகத்திலும், தொலைக்காட்சியிலும் அந்த விஷத்தை பற்றி பெரிதாக எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் இன்று சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் சம்பவத்தில் அரசு மற்றும் காவல்துறை செய்த எல்லா தவறுகளையும் ஊடகங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன.

இந்த அஜித்குமார் வழக்கில் சம்மந்தப்பட்ட 5 காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களை சிபிஐ விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட அஜித்குமார் குடும்பத்தை சேர்ந்த அவரின் சகோதரருக்கு அரசு வேலை கொடுப்பதாக முதல்வர் வாக்குறுதி கொடுத்துள்ளார். 5 லட்சம் அரசு நிவாரண தொகை வழங்கியுள்ளது.

இந்நிலையில் சிவகங்கை திருபுவனம் காவல் நிலையத்தில் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்று அவரை அடித்து துன்புறுத்தியதை வினோத் என்பவர் நேரில் பார்த்துள்ளார். அவர் நேரில் பார்த்ததை தற்போது பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அஜித்குமார் சுய நினைவில் இல்லாத போது கூட போலீசார் அவரை தொடர்ந்து அடித்தனர். போலீஸ் அடித்த அடியில் அவருக்கு வலிப்பு வந்தது. அஜித்குமாரின் சிறுநீரில் இருந்து ரத்தம் வந்தது. அப்போது கூட போலீசார் அவரை அடிச்சுக்கிட்டே தான் இருந்தாங்க. வலிப்பு வந்த பிறகு தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். படத்தில் கூட இந்த மாதிரி போலீஸ் அடித்ததை நான் பார்த்ததில்லை என்று பேட்டி கொடுள்ளார் வினோத்.

Previous articleபாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கம் – அன்புமணியின் கடும் நடவடிக்கை! ராமதாஸ் பதிலடி என்ன?
Next articleஅஜித் குமார் மரணம்! ஜெய் பீம் படத்துடன் ஒப்பிட்டு முதல்வரை விளாசிய ராமதாஸ்!