இன்றைய ராசி பலன் 19.08.2020 Today Rasi Palan 19-08-2020

0
95

இன்றைய ராசி பலன்- 19.08.2020

நாள் : 19.08.2020

தமிழ் மாதம்: 

ஆவணி 3, புதன்கிழமை.

நல்ல நேரம்: 

காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை.

இராகு காலம்: 

மாலை 12.00 முதல் 1.30 வரை.

 எம கண்டம்:

காலை 7.30 முதல் 9.00 வரை.

குளிகன்:

பகல் 10.30 முதல் 12.00 வரை,

திதி:

இன்று அமாவாசை திதி காலை 08.11 வரை பின் வளர்பிறை பிரதமை திதி பின் இரவு 05.19 வரை பின்பு வளர்பிறை துதியை ஆகும்.

நட்சத்திரம்:

மகம் நட்சத்திரம் பின் இரவு 02.07 வரை பின்பு பூரம் ஆகும்.

இன்று சித்தயோகம் பின் இரவு 02.07 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். தொழிலில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வராத கடன்கள் இன்று கைக்கு வந்து சேரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் அனைவரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று எளிதில் முடிந்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியாக போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்றைய நாள் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர் களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்றைய நாள் சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்கு உள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் வளைந்து கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். பொறுமை தேவைப் படும் நாள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்று கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள் சகோதர வகை யில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதக மாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள் நல்லன நடக்கும் நாள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்று குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.