அவர்களை சும்மா விடக்கூடாது சுரேஷ் ரெய்னா ஆவேசம்

0
196
சுரேஷ் ரெய்னா  தனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டுவிட்டரில் எழுதியுள்ள ரெய்னா, பஞ்சாப் காவல்துறைக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில்  பஞ்சாப்பில் என் குடும்பத்துக்கு நேர்ந்தது  கொடூரமானது. என் மாமா படுகொலை செய்யப்பட்டுள்ளார். என் அத்தையும் சகோதரர்களும் பலமாகக் காயமடைந்துள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக உயிருக்குப் போராடிய என் சகோதரரும் நேற்றிரவு மரணம் அடைந்துள்ளார். என் அத்தை இன்னும் உயிருக்குப் போராடி வருகிறார். உயிா் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.
அன்றிரவு என்ன நடந்தது, யார் செய்தார்கள் என்று இன்று வரை எங்களுக்குத் தெரியவில்லை. இந்த வழக்கைக் கவனிக்குமாறு பஞ்சாப் காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறேன். இந்தக் கொடுமையான செயலைச் செய்தவர்கள் யார் என்பதாவது எங்களுக்குத் தெரிய வேண்டும். அந்தக் குற்றவாளிகள் மேலும் குற்றங்கள் செய்யாதவாறு தடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள ரெய்னா, பஞ்சப் முதல் மந்திரியையும் டேக் செய்துள்ளார்.
Previous articleபேரழிவிற்கு தயாராகி விடுங்கள் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
Next articleகெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை வேகமாக குறைய மோர் கூட இதை குடியுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here