பாட்டாளி மக்கள் கட்சியா? மத்திய அரசா? 8 வழிசாலை உச்சநீதி மன்றம் அதிரடி!

0
77

தமிழகத்தில் எட்டு வழி சாலை அமைக்கும் பணி மத்திய அரசு கடந்த வருடம் உத்தரவிட்டது. இதை அடுத்து மாநில அரசு அதை நடைமுறை படுத்த எட்டு வழி சாலை செல்லும் இடத்தில் அளவீடு செய்து ஆங்காங்கே கற்களை ஊன்றியது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் அழிந்து விடும் என பாட்டாளி மக்கள் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதன் பிறகு எட்டு வழி சாலை தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக எட்டு வழி சாலை திட்டத்தை தொடங்கும் விதத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஒப்புதல் பெற்று உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பிக்க கட்டளை இட்டது. 8 வழிச்சாலை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த எதிர்ப்பு இருப்பதால் வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

Anbumani Ramadoss News4 Tamil Online Tamil News Channel
Anbumani Ramadoss News4 Tamil Online Tamil News Channel

சேலம்- சென்னை இடையே காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலத்திற்கு புதிய 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நிலத்தை அளவெடுக்கும் பணி கடந்த ஆண்டு நடந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கோரி, பல்வேறு போராட்டங்களை விவசாயிகளும், பொதுமக்களும் நடத்தி வருகிறார்கள்.

ஐகோர்ட்டில் வழக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடரப்பட்டது.இந்நிலையில் 8 வழிச்சாலைக்கு எதிராக வழக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி 8வழிச்சாலை திட்டத்துக்காக அழிக்கப்படுவதா என கூறி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் வழக்கு வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் திமுக, பாமக, நாம்தமிழர் இயக்கத்தினரும் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி

தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு பொதுமக்களிடம் கருத்துகேட்பு நடத்த வில்லை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என் றுகூறி திட்டத்தை செயல்படுத்த தடை விதித்ததோடு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்தது. பறிமுதல் செய்த நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து தமிழக அரசு மேல் முறையீடு உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் கடந்த மார்ச் 31ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 8வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.

மேலும் படிக்க : அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்

இதனிடையே சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 8வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.தொடர்ந்து சென்னை -சேலம் எட்டுவழிச்சாலை நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை31ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க : யார் இந்த பையன்? இவருக்கு இப்படி ஒரு பையனா? ஆச்சரியத்தில் திரையுலகினர்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K