வயது முதிந்தவர்களுக்கு ப்ரீ ட்ரிப்! அரசாங்கம் அறிவித்த அதிரடி அறிவிப்பு!
6௦ வயதிற்கும் மேற்பட்டோர் சிரமத்திற்கு உள்ளக கூடாது என அரசாங்கம் அவர்களுக்கென்று எம்டிசி பஸ் பாஸ் திட்டத்தை வெளியிட்டது.கொரோனா காரணத்தினால் இந்த திட்டம் கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து வரும் வேலையில் மீண்டும் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வயது முதிந்தோர்களுக்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இத்திட்டத்தில் மாதம் 10 டோக்கன்கள் வழங்கப்படும்.6 மாதத்திற்கு இதை வைத்து இலவச பயணம் மேற்கொள்ளலாம்.கொரோனா பரவல் தடுப்புக் காரணமாக இத்திட்டம் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.மீண்டும் இந்த திட்டம் நாளை முதல் தொடங்கயிருக்கிறது.
இதற்காக புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள் நாளை முதல் அதற்கான படிவத்தை சமர்பிக்கலாம்.ஏற்கனவே பஸ் பாஸ் அடையாள அட்டை வைத்திருப்போர் நாளை முதல் அதை பயன்படுத்தி டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்காக www.mtcbus.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாநகர பேருந்துகளில் குறிப்பிட்ட பணிமனைகள் மற்றும் பேருந்து நிலைகளில் இலவசமாக பஸ் பாஸ் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும்.இந்த அறிவிப்பை எம்டிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.