ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்!

0
108
Public gathering for a kottar and chicken biryani!
Public gathering for a kottar and chicken biryani!

ஒரு கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் சேரும் மக்கள் பொதுக்கூட்டம்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிக அளவு பணப்புழக்கம்  ஆரம்பித்து விட்டது.தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாகவே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் சட்டசபை தொகுதியை கைப்பற்றுவதற்கு திமுக மற்றும் அதிமுகவினர்  ஒருவர்பின் ஒருவராக போட்டிப்போட்டு  பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மட்டுமின்றி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி அவர்களும் பிரச்சாரம் செய்து முடித்துள்ளார்.தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் கூட்டம் குவிகிறது.ஏனென்றால் மக்கள் கூட்டதில் கலந்து கொள்ள ஆண்களுக்கு கோட்டரும்,கோழி பிரியாணியும் மற்றும் பணம் ரூபாய் 500 ம் வழங்கப்பட்டு வருகிறது.இதே பெண்களுக்கு கோழி பிரியாணி மற்றும் பணம் ரூபாய் 500 ம் வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் இவற்றையெல்லாம் கண்டு தங்களது ஓட்டுக்களை ஏலத்தில் விடக்கூடாது.இந்திய குடிமகனாக இருந்து அவரவர் வாக்குகளை நேர்மையாக செலுத்த வேண்டும்.கடந்த மக்களவை தேர்தலின் பொது திருப்பூர் தொகுதியில் அளவு கடந்த பணம் விளையாடியது.இப்பொழுதும் இவ்வாறு நடக்குமாயின் மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.

மக்களின் ஓட்டுக்காக அதிகப்படியான பணத்தை செலவிடவும் அரசியல்  கட்சிகள் தயாராக உள்ளனர்.தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே பணம் விளையாடவும்  ஆரம்பித்து விட்டது.மக்களிடம் உள்ள இந்த வாக்குக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் அரசியல்  கட்சி தலைவர்கள் பிறகு எதையும் செய்ய துணிய மாட்டார்கள்.பொதுமக்கள் பணத்திற்கு ஆசைப்படாமல் இந்த தேர்தலில் அதிக முறை சிந்தித்து தங்களது  ஓட்டுக்களை செலுத்த  வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.