தொடர்ந்து மூன்று தலைமுறையாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தொகுப்பு!!

0
45

தொடர்ந்து மூன்று தலைமுறையாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தொகுப்பு

சினிமா துறையில் தாத்தா, மகன், பேரன் போன்று மூன்று தலைமுறையாக நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் இதோ.


இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பவர் ‘சித்தலிங்கய்யா’.இவர் திரைப்பட இயக்குனர்,எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.தனது தனித்துவமான திரைப்படம் உருவாக்கும் பாணிக்காக நன்கு அறியப்பட்டவர். 1964 ஆம் ஆண்டு ‘மேயர் முத்தண்ணா’ என்ற கன்னட பட மூலம் இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.இவரை தொடர்ந்து மகன் ‘முரளி’ 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 இல் வந்த “புது வசந்தம்”,1991 இல் வந்த “இதயம்” படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.இவரின் சிக்னேச்சர் படமான ‘இதயம்’ காதல் கதை திரைப்படங்களுக்கு எல்லாம் முன்னோடி ஆகும்.இவரை தொடர்ந்து இவரது மகன் ‘அதர்வா முரளி’ 2009 இல் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய ‘பாணா காத்தாடி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழில் 15 மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

 

அடுத்து நடிகர் ‘முத்துராமன்’ இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் நடத்தி வந்த “சேவா ஸ்டேஜ்” நாடகங்களில் நடித்து வந்தார். ‘நவரச திலகம்’ என்று அழைக்கப்பட்டார்.மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நவரச நாயகனான இவரின் மகன் ‘கார்த்தி’ அலைகள் ஓய்வதில்லை படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார்.மேலும் நவரச நாயகனின் மகனான ‘கௌதம் கார்த்தி’  மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்பொழுது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

 

 

அடுத்து நடிகர் ‘வினோத் ராஜ்’ இவரது உண்மை பெயர் ‘ஜான் விக்டர்’.இவர் தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திரவேடங்களில் நடித்துள்ளார்.இவரது மகன் ‘விக்ரம்’ 1990 ஆம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.1999 ஆம் ஆண்டுவெளியான ‘சேது’ என்ற படம் விக்ரமிற்கு திருப்புமுனையாக அமைந்தது.’சியான் விக்ரம்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விக்ரம் மற்ற ஹீரோக்களை போல் அல்லாமல் ஒரு படத்திற்காக உடளவில் மற்றும் மனதளவில் தன்னையே அர்பணித்துவிடுவார்.இக்காரணத்தால் தான் தமிழ் சினிமாவில் இன்றும் டாப் நடிகர்கள் லிஸ்டில் உள்ளார் விக்ரம்.மேலும் இவரை பின்பற்றி மகன் துருவ் விக்ரம் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஆதித்ய வர்மா’ என்ற ரீமேக் காதல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி
‘ரக்கட் பாய்’ ஆக கலக்கி இருப்பார்.

 

 

அடுத்து நடிகர் ‘நாகேஷ்’ இவர் 1959 ஆம் ஆண்டு ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் நகைச்சுவை நடிக‌ராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.இவரை தொடர்ந்து மகன் ‘ஆனந்த் பாபு’ 1963 ஆம் ஆண்டு வெளியான ‘தங்கைக்கோர் கீதம்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .இவர் நடித்த ‘சேரன் பாண்டியன்’ படத்தில் வரும் ‘காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு’ என்ற பாடல் மிகவும் பேமஸ் ஆன பாடல். அடுத்து இவரது மகன் ‘கஜேஸ்’ 2014ல் ‘கல்கண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார்.துரதிர்ஷ்டவசமாக இப்படம் பாக்ஸ்ஆபிஸில் தோல்வியடைந்தது. நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, 2018 இல் ‘ஸ்கூல் கேம்பஸ்’ என்ற தனது இரண்டாவது படத்தைத் தயாரித்தார், ஆனால் அதுவும் தோல்வியடைந்துள்ளது.

 

 

அடுத்து நடிகர் ‘ரவிச்சந்திரன்’ காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். 1960கள்-70களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். இவரது மகன் ‘அம்சவர்தன்’ தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளர்.பெயர் சொல்லும்படி அமைந்த திரைப்படம் ‘புன்னகை தேசம்’ மட்டுமே.மேலும் ,ரவிச்சந்திரனின் பேத்தியும் ,அம்சவர்தனின் அண்ணன் மகளுமான ‘தன்யா ரவிச்சந்திரன்’ 2016 ல் வெளியான ‘பலே வெள்ளையத்தேவா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பின்னர் ‘கருப்பன்’ என்ற படம் மூலம் நன்கு அறியப்பட்டார்.இவர் தற்பொழுது விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

 

அடுத்து நடிகை ‘கமலா காமேஷ்’ இவர் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார்.இயக்குனர் ‘பாரதி ராஜா’ இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தில் தாய் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அம்மா வேடம் என்றால், அதுவும் ஏழை அம்மா, பாவப்பட்ட அம்மா என்றால் ஒரே சாய்ஸ்… கமலா காமேஷ் என்று சொல்லும் அளவிற்க்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் இவரை தொடர்ந்து இவரது மகள் ‘உமா ரியாஸ்’ 2003 ல் வெளிவந்த ‘அன்பே சிவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்று பல படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் .மேலும் தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.உமா ரியஸை தொடர்ந்து அவரது மகன் ‘ஷாரிக் காசன்’ 2016 ல் வெளிவந்த ‘பென்சில்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவரது நடிப்பு திறமை அனைவராலும் பாராட்டும் வகையில் இருக்கும்.

 

அடுத்து நடிகை ‘குமாரி ருக்குமணி’ இவர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை ஆவார்.1961 தொடங்கி 1975 வரையில் பல திரைப்படங்களில் அன்னை வேடங்களில் நடித்துள்ளார்.மேலும் இவரது மகள் ‘லட்சுமி’ 1968 ஆம் ஆண்டு வெளியான ‘ஜீவனாம்சம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.பெரிதும் பேசப்பட்ட படமான ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ரகுவரன் அவர்களுக்கு மனைவியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பார்.இவரை தொடர்ந்து மகள் ‘ஐஸ்வர்யா பாஸ்கரன்’

‘நியாயங்கள் ஜெய்க்கட்டும்’ என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது 50 கும் மேற்பட்ட திரைப்படங்களின் நடித்துள்ளார்.தொடர்ந்து இவர் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

 

 

அடுத்து நடிகர் ‘சிவாஜி கணேசன்’.இவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்தளவிற்கு தனது நடிப்பு திறமையை திரையில் காட்டியிருப்பார். ‘நடிகர் திலகம்’ அவர்களின் முதல் படமான ‘பராசக்தி’ 1952 ஆம் ஆண்டு வெளிவந்தது.இவரின் நடிப்பினால் மட்டுமே இப்படம் ஓடியது என்று சொல்லும் அளவிற்கு நடிப்பிற்கு உயிர்கொடுத்து தனது நடிப்பு கலையை வெளிப்படுத்தியிருப்பார்.’கலைமாமணி ,பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் போன்ற உயரிய விருதுகள் இவரின் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லலாம்.மேலும் இவரை பின்பற்றி இவரது மகன் ‘பிரபு’ 1982 ல் வெளிவந்த ‘சங்கிலி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.100 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.தொடர்ந்து நடிகர் பிரபுவின் மகன் ‘விக்ரம் பிரபு’ வும் பிரபு சாலமனின் கும்கி (2012) திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இவன் வேற மதிரி (2013) மற்றும் வெள்ளைக்கார துரை (2014) ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.சிறந்த வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதை விருப்பமாக கொண்டுள்ளார்.

 

 

இறுதியாக நடிகர் ‘சக்தி பிரசாத்’ இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.இவரது மகனான ‘அர்ஜுன்’ தமிழ் சினிமாவின் முன்னனி நாடிகளில் ஒருவர்.அனைவராலும் ‘ஆக்ஷன் கிங்’ என்று அழைக்கபடும் இவர் 160 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அர்ஜுன் என்றாலே நமக்கு நியாபகம் வருவது அவரின் ‘முதல்வன்’ படம் தான்.மேலும் ‘ஏழுமலை’ படத்தில் அவருக்கு வரும் பேக்ரௌண்ட் மியூசிக் மற்றும் அவரது நடை பாவனையை பார்த்தால் உடல் சிலிர்த்து போகும் அளவிற்கு அழகான காட்சியாக அமைந்திருக்கும்.இவரை தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா 2013 ல் வெளிவந்த ‘பட்டத்து யானை’ என்ற தமிழ் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

author avatar
Savitha