மனைவிக்கே தெரியாமல் தினமும் உணவில் போதை மருந்தை கலந்துக் கொடுத்த கொடூர கணவன்!! அடுத்து செய்த செயல் அதிர்ச்சியின் உச்சம்!! 

0
184
A cruel husband who mixed drugs with his wife's food every day!! What happened next was the height of shock!!
A cruel husband who mixed drugs with his wife's food every day!! What happened next was the height of shock!!

 மனைவிக்கே தெரியாமல் தினமும் உணவில் போதை மருந்தை கலந்துக் கொடுத்த கொடூர கணவன்!! அடுத்து செய்த செயல் அதிர்ச்சியின் உச்சம்!! 

கட்டிய மனைவிக்கு அவருக்கே தெரியாமல் தினமும் போதை மருந்தைக் கொடுத்து யாரும் செய்யாத ஒரு கொடூர செயலை கணவன் ஒருவன் செய்துள்ளான். அதுவும் 10 வருடங்களாக இந்த கேவலமான செயலை செய்துள்ளான்.

பிரான்சை சேர்ந்தவன்  லி டொமினிக். இவனது மனைவி பிரான்சுவா. டொமினிக் தினமும் தனது மனைவிக்கு அவருக்கே தெரியாமல் உணவில் போதை மருந்தை கலந்துக் கொடுத்து பல ஆண்களுக்கு விருந்தாக்கியுள்ளான்.

மனைவிக்கு துளியும் சந்தேகம் வராத வண்ணம் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான். 10 வருடங்களாக இந்த செயலை செய்து வந்த அவன் இந்த கேவலத்தை வீடியோ பதிவும் செய்துள்ளான். ஏறக்குறைய 91 முறை அந்த பெண் கொடுமையாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். 

அவன் தினமும் பிரான்சுவாக்கு லோரஸெபம் என்ற வகை போதை மருந்தை கொடுத்துள்ளான். இதனால் அவர் சுய நினைவு இல்லாமல் இருக்கும் போது ஆண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளான். சுமார் 10 வருடங்களாக செய்து வந்த செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதற்காக அவர் தெற்கு பிரான்சில் உள்ள அவிக்னான் பகுதியில் உள்ள அவரது வீட்டிலேயே இந்த மோசமான செயலை செய்து வந்தது தெரிய வந்தது. இதுவரை இந்த குற்ற செயலில் சுமார் 83 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 26  வயது முதல் 73 வயது வரை உள்ளவர்கள். 83 பேரில் 51 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சுமார் 92 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.

இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தீயணைப்பு வீரர், சிறைக்காவலர், செவிலியர், ஐடி ஊழியர், லாரி டிரைவர், நகராட்சி கவுன்சிலர், வங்கி ஊழியர், பத்திரிக்கையாளர் ஆகியோர் உள்ளனர்.

விபசாரத்திற்கு வருபவர்கள் புகையிலை, வாசனை திரவியம் முதலியவற்றை பயன்படுத்த கூடாது. குளியலறையில் ஆடைகளை அவிழ்க்க கூடாது. அதற்கு பதிலாக சமையலறையில் அவிழ்க்க கூறியதோடு மட்டுமில்லாமல், மனைவியின் அறைக்கு செல்லும் முன்பு வெந்நீரில் கைகளை கழுவிக் கொண்டு செல்ல வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளைஅட் டொமினிக் தான் அழைத்து வரும் வாடிக்கையாளர்களிடம்  விதித்துள்ளான்.

மேலும் வாகனங்களை வீட்டின் அருகே நிறுத்தாமல் அருகில் உள்ள பள்ளியின் அருகே நிறுத்தி விட்டு நடந்து தான் வர வேண்டும் எனவும் கூறியுள்ளான். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் இது போல நடப்பது தங்களுக்கு தெரியாது எனவும், சிலர் அவருடைய மனைவி என தெரியாது எனவும் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.