மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜி (75). இவரதின் மகன் குமார் (54) இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்படும். அந்த வகையில் குமார் தனது தந்தை ராஜிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படியும் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜி பக்கத்தில் இருந்த அரிவாளை எடுத்து குமாரின் கை மீது வெட்டி உள்ளார். மேலும் அருகில் கிடந்த கட்டையை எடுத்து குமாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் குமார் பலத்த காயமடைந்தார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசாரிடம் குமாரின் தந்தை ராஜ் மீது கொலை முயற்சி புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் குமார் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.