சேலத்தில் கொடூரம் 5 பேர் கொண்ட கும்பல் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

0
202
A gang of 5 brutally raped a 14-year-old girl in Salem!
A gang of 5 brutally raped a 14-year-old girl in Salem!

சேலத்தில் கொடூரம் 5 பேர் கொண்ட கும்பல் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் கருப்பூர் தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தையும் இருக்கும் வினித் என்ற நபர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பழகி வந்துள்ளார், இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியிடம் வெளியில் அழைத்து செல்வதாக கூறி மறைமுகமான இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

சிறுமியை அழைத்து சென்ற வினித் அவரது நண்பர்களான விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன், அருண்குமார் ஆகியோரை வரவழைத்து  சிறுமியை பலவந்தமாக மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை தந்தையிடம் தெரிவித்தார், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் ஐந்து பேரையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு விந்து மற்றும் கொரான பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

Previous articleஇனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு
Next articleஅதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு!!