நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி!

0
100
A rabid dog who can't stop his rage even if you shoot him!! Attempt to burn a seven-year-old girl alive!
A rabid dog who can't stop his rage even if you shoot him!! Attempt to burn a seven-year-old girl alive!

நிக்க வச்சு சுட்டாலும் ஆத்திரம் தீராத வெறிநாயே!! ஏழு வயது சிறுமியை உயிரோடு எரிக்க முயற்சி!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கன்வாடி மையத்தில் சத்துணவு மையத்தில் பணியாளராக சிறுமியின் பாட்டி வேலை செய்து வந்துள்ளார். இவரது தாய் வேறு திருமணம் செய்து கொண்டதால் மகளை பாட்டியுடன் விட்டு சென்று விட்டார். சிறுமி பாட்டியுடன் தங்கி படித்து வந்துள்ளார்.

தன் பாட்டியுடன் அங்கன்வாடி சென்று இருந்த சிறுமி பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் ஓடி வந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்த போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை போலீசாரிடம் கூறினார். அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (20)என்ற இளைஞர் சிறுமியை விளையாட அழைத்து செல்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பிறகு அச்சிறுமியை கொலை செய்வதற்காக ஆடையில் தீ வைத்து விட்டு அங்கிருந்து ஓடி உள்ளார்.

மேலும் இது குறித்து சிறுமி வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஏழு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து உயிரோடு எரித்துக் கொள்ள முயன்றதாக விஜயகுமாருக்கு தக்க தண்டனை வழங்குமாறு அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கூறினார்கள்.

author avatar
Parthipan K