ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!.

0
128
A romantic couple who committed suicide by hanging themselves in the same saree!
A romantic couple who committed suicide by hanging themselves in the same saree!

ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாயடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருடைய வயது 22.

இவர் ஆர்கே பேட்டை அருகே அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கொண்டாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய வயது 25. இந்நிலையில் பவித்ராவும் சவுந்தரராஜனும் காதலித்து வந்தனர்.

இருவரும் ஒருவருக்கொருவர் உயிராக காதலித்து வந்தனர். இவர் காதலுக்கு அவரது குடும்பத்தினர்கள் வெறுப்பு தெரிவித்து வந்தனர்.இதனால் அவர்கள் இருவரும் பயந்து காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது பவித்ரா 5 மாத கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று கொண்டாபுரம் காலனியிலுள்ள சௌந்தரராஜன் வீட்டில் பவித்ராவும் சவுந்தரராஜனும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆர்கே பேட்டை போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K