ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!
ஈரோடு மாவட்டம் அரசாளூர் அருகே உள்ள எல்லக்காளிபாளையம் காரைவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் விமலேஷ் (7). மேலும் இவர் அனுமன் பள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் நேற்று முன்தினம் விமலேஷ் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று விட்டு அரசு கவுன்சில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
மேலும் வெள்ளோடு அனுமன்பள்ளியில் உள்ள ரோட்டில் காரைவாய்க்கால் என்ற இடத்தில் இறங்கி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ரோட்டை கடக்கும் பொழுது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று விமலேஷ் மீது மோதியது. மேலும் அந்த விபத்தில் விமலேஷ் படுகாயம் அடைந்தார். மேலும் அங்குள்ள அக்கம் பக்கத்தினர் உடனடியாக விமலேஷ்யை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் அந்த மருத்துவமனையில் விமேலஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி விமலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வெள்ளோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உத்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்து ஏற்படுத்திய சரக்கு வேன் டிரைவரான கவுந்தபாடியை சேர்ந்த தருண்குமாரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.